Sunday, April 11, 2010

கும்பமேளாவில் பங்கேற்கவில்லை: முடிவை கைவிட்டார் சோனியா



புதுடில்லி:ஹரித்துவாரில் நடக்கும் மகா கும்பமேளாவில் பங்கேற்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா கைவிட்டார். தனது விஜயத்தால், பக்தர்கள் மற்றும் சாமியார்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால், இந்த முடிவை எடுத்தார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:பல ஆண்டுகளாக நடந்து வரும் கும்பமேளா விழாவில், நமது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த புனித திருவிழாவுக்கு நான் வரவேண்டும் என, ஹரித்துவார் மக்களும், சாமியார்களும் அழைப்பு விடுத்திருந்தனர்.அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.



நான் ஹரித்துவார் செல்ல விரும்புகிறேன். ஆனால், நான் சென்றால் மக்களுக்கும், மற்றவர்களுக்கும் அசவுகர்யம் ஏற்படும். அதை கருத்தில் கொண்டே கும்பமேளாவில் கலந்து கொள்வதில்லை என, முடிவு செய்துள்ளேன்.நூற்றாண்டுகளுக்கு முன், தத்துவ ஞானிகளும், சன்னியாசிகளும் காட்டிய வழியில், மக்கள் கங்கையில் நீராடி புத்துணர்வு பெறுவர் என, நம்புகிறேன்.இவ்வாறு சோனியா கூறியுள்ளார்.கடந்த 2001 ஜனவரியில், அலகாபாத்தில் நிகழ்ந்த கும்பமேளாவின் போது, திரிவேணி சங்கமத்தில் சோனியா புனித நீராடினார். அதன்பின் அவர் எந்த கும்பமேளாவிலும் பங்கேற்கவில்லை.


No comments:

Post a Comment