Thursday, April 15, 2010
பன்றிக் காய்ச்சலை கண்டறிய மூலக்கூறு ஆய்வகம் அமைப்பு
சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலை கண்டறியும் மூலக்கூறு ஆய்வகம் மற்றும் மின் நூலகம் தொடக்க விழா நேற்று நடந்தது. சுகாதாரத்துறை முதன்மை செயலர் சுப்புராஜ் தலைமை வகித்தார். மருத்துவக் கல்லூரி இயக்குநர் விநாயகம், முதல்வர் மோகனசுந்தரம், நுண்ணுயிரியல் மைய இயக்குநர் சுமதி, மூலக்கூறு ஆய்வக தலைவர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மூலக்கூறு ஆய்வகம் மற்றும் மின்நூலகத்தை திறந்து வைத்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில், அதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. இப்போது, சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.38 லட்சம் மதிப்பில் மூலக்கூறு ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் பன்றிக் காய்ச்சல் மட்டுமல்லாமல் உயிர்கொல்லி நோய்களையும் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். மேலும், தொற்று நோய்களான காசநோய், மஞ்சள் காமாலையை கண்டறியலாம். திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு, சென்னை அரசு மருத்துவமனைக்கு மட்டும் ரூ.27 கோடியே 59 லட்சத்துக்கு நவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் புத்தகப் புழுக்களாக இல்லாமல், கம்ப்யூட்டர் புழுக்களாக மாறி வரும் நிலையில், 1969ம் ஆண்டு படித்த மாணவர்களின் நன்கொடை மூலம், இங்கு மின்நூலகம் தொடங்கப்பட்டது, பாராட்டுக்குரியது என்று அமைச்சர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment