Saturday, June 5, 2010

ராமநாதபுரத்தில் கழிவு நீர் செல்வதில் தகராறு: உரிமையாளர் வீட்டை சூறையாடிய வாலிபர்- சம்பவம்

ராமநாதபுரம், ஜூன் 4-

ராமநாதபுரம் வசந்த நகர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 45). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான வீட்டின் மாடி பகுதியை காசிநாதன் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் மாடி வீட்டில் கழிவு நீர் செல்வ தில் தடை ஏற்பட்டு இருந் தது. பலமுறை அதனை சரிசெய்யுமாறு காசிநாதன் வீட்டு உரிமையாளர் தட்சி ணாமூர்த்தியிடம் தெரி வித்து இருந்தார். ஆனால் வீட்டு உரிமையாளர் அது தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த காசிநாதன் நேற்று காலை தட்சிணாமூர்த்தியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். தனது நீண்ட நாள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அங்கிருந்த டி.வி., குளிர் சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்களை கீழே போட்டு உடைத்தார். மேலும் வீட்டு கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினார்.

இது குறித்து தட்சிணா மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிநாதனை கைது செய்தனர்.

No comments:

Post a Comment