Monday, June 7, 2010

நடுவானில் பறந்தபோது விமானத்தில் எந்திர கோளாறு அவசரமாக தரை இறங்கியது



சண்டிகாரில் இருந்து இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு தனியார் சிறிய ரக விமானம் ஒன்று சென்றது. விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் சிலர் இருந்தனர்.விமானம் சிம்லாவுக்கு சென்று தரை இறங்க தயாரானது. அப்போது விமானத்தின் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.






எனவே விமானம் சிம்லாவில் தரை இறங்காமல் மீண்டும் சண்டிகார் திரும்பி அங்கு பத்திரமாக தரை இறங்கியது.






சிம்லா விமான நிலையம் மேஜை மேல் பகுதி அமைப்பில் உருவாக்கப்பட்டது ஆகும். இதேபோன்று அமைந்த மங்களூர் விமான நிலையத்தில் சமீபத்தில் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டது.






எந்திர கோளாறுடன் இருந்த விமானம் சிம்லாவில் தரை இறங்கி இருந்தால் விபத்தில் சிக்கும் வாய்ப்பு இருந்தது. எனவே தான் அங்கு இறங்காமல் மீண்டும் சண்டிகார் திரும்பி வந்து தரை இறங்கியது

No comments:

Post a Comment