ராமநாதபுரம், நவ. 17: ராமநாதபுரம் இந்திரா நகரில் ஒரு பெண் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீஸôர் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்து, அவரது கணவரை தேடிவருகின்றனர். ராமநாதபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த முருகன் மனைவி பாலம்மாள் (38).
இருவரும் கட்டடத் தொழில் செய்யும் கூலித் தொழிலாளிகள். சம்பவ நாளன்று மனைவி பாலம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இறந்து கிடந்தார். ஆனால் கணவரைக் காணவில்லை.
சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளார்.
கணவரே மனைவியை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸôர் விசாரணை செய்து அவரையும் தேடி வருகின்றனர்
Thursday, November 18, 2010
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சனிக்கிழமைக்குள் அஃபிடவிட்: உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்
புதுதில்லி, நவ.18: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சனிக்கிழமைக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வழக்கில் அரசின் சார்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் தெரிவித்தார். சனிக்கிழமைக்குள் அதைத் தாக்கல் செய்யுமாறு அவரை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி விரும்பினால் அவரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யலாம். திங்கட்கிழமைக்குள் அதைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இவ்வழக்கில் அரசின் சார்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் தெரிவித்தார். சனிக்கிழமைக்குள் அதைத் தாக்கல் செய்யுமாறு அவரை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி விரும்பினால் அவரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யலாம். திங்கட்கிழமைக்குள் அதைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
Sunday, November 14, 2010
நடுக்கடலில் தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை :மீன்பிடி வலைகள் வெட்டி நாசம்
ராமேஸ்வரம் : நடுக்கடலில் தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர், மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசினர். புயல் மழை தடைக்குப்பின், ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்துறை அனுமதி பெற்று 500க்கும் மேற்பட்ட படகுகள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றன . கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது,ரோந்துப்படகில் வந்த இலங்கை கடற்படையினர் , படகுகளை வழிமறித்து, மீன்பிடி வலை, போட்பலகைகளை வெட்டி கடலில் வீசினர். மீனவர்கள் ஜஸ்டின், ஹெட்டர் படகு உட்பட 20 க்கும் மேற்பட்ட படகின் மீன்பிடி வலைகள் சேதமடைந்தன. மேலும்," இலங்கை கடல் பகுதிக்குள் வரக்கூடாது,' என எச்சரித்ததை தொடர்ந்து, வேறு பகுதிக்கு சென்று மீன்பிடித்து திரும்பினர். இது போல் மற்றொரு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் ,மீனவர்களை வழிமறித்து விரட்டியதால் மீன்பாடு இல்லாமல் ஏராளமான மீனவர்கள் நேற்று கரை திரும்பினர்.
நேற்று காலை ராமேஸ்வரம் வந்து சேர்ந்த மீனவர்களில் டால்வின் கூறியதாவது:இரவு எட்டு மணிக்கு கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்தபோது ,அங்கு வந்து இலங்கை கடற்படையினர், எங்களது படகை வழிமறித்து ,பெரிய வாளால் மீன்பிடி வலையை வெட்டி கடலில் போட்டனர், என்றார். புயல் மழைக்கு பின் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு, நேற்று குறைந்த அளவே இறால் மீன்பாடு கிடைத்துள்ளது.ஒரு சில படகுகளில் கூடுதலாக நண்டுகளும் கிடைத்துள்ளன. "இந்நிலை தொடர்ந்தால், மீண்டும் படகுகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்,' என, மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
நேற்று காலை ராமேஸ்வரம் வந்து சேர்ந்த மீனவர்களில் டால்வின் கூறியதாவது:இரவு எட்டு மணிக்கு கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்தபோது ,அங்கு வந்து இலங்கை கடற்படையினர், எங்களது படகை வழிமறித்து ,பெரிய வாளால் மீன்பிடி வலையை வெட்டி கடலில் போட்டனர், என்றார். புயல் மழைக்கு பின் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு, நேற்று குறைந்த அளவே இறால் மீன்பாடு கிடைத்துள்ளது.ஒரு சில படகுகளில் கூடுதலாக நண்டுகளும் கிடைத்துள்ளன. "இந்நிலை தொடர்ந்தால், மீண்டும் படகுகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்,' என, மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
எந்த ஜாதி எந்த மதத்துக்கு எவ்வளவு ஓட்டு? கணக்கெடுக்கிறது தி.மு.க.,
சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதன் முறையாக மாவட்ட, நகர, ஒன்றிய வாரியாக ஜாதி ஓட்டுகள் மற்றும் சிறுபான்மை ஓட்டுகள் குறித்த துல்லிய கணக்கெடுப்பை நடத்த தி.மு.க., நிர்வாகிகளுக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக அச்சிடப்பட்ட படிவஙகள் மாவட்ட நிர்வாகிகளுக்கு வந்துள்ளன.
தமிழகத்தில் அடுத்தாண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 1991 சட்டசபை தேர்தல் முதல், ஜாதி ரீதியான அமைப்புகள் அரசியல் கட்சியாக உருப்பெற்று தேர்தலில் போட்டியிடத் துவங்கியுள்ளன. வரும் சட்டசபை தேர்தலை குறிவைத்து பல ஜாதி அமைப்புகள், அரசியல் கட்சியாக அவதாரம் எடுக்கத் துவங்கியுள்ளன. 1991க்கு பிறகு தமிழகத்தில் தொடர்ந்து தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பில் இருந்தாலும், சட்டசபை தேர்தலில் தொடர் வெற்றி பெற முடியவில்லை. தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் மாறி மாறித்தான் வெற்றி பெற்றுள்ளன. 2006 சட்டசபை தேர்தலில் மெஜாரிட்டிக்கும் குறைந்த இடங்களை பெற்ற தி.மு.க., முதன் முதன்முறையாக காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. வரும் சட்டசபை தேர்தலில் முழு பலத்துடன் மீண்டும் ஆட்சியை பிடிக்க தி.மு.க., மேலிடம் காய் நகர்த்தி வருகிறது.
முதல் கட்டமாக மாநிலத்தில் சீரமைக்கப்பட்டுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் அடங்கியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் படி, ஜாதி, சிறுபான்மை ரீதியாக உள்ள ஓட்டுகள் பற்றி கணக்கெடுப்பு நடத்த தி.மு.க., நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, தி.மு.க., மேலிடத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள பிரத்யேக விண்ணப்ப படிவங்கள் மாவட்ட நிர்வாகிகளுக்கு சென்னையில் இருந்து வந்துள்ளன. எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., தொகுதி விவரம், ஓட்டுச்சாவடி எண், பாகம் எண், மொத்த வாக்காளர்கள், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள், ஜாதி ரீதியாக உள்ள வாக்காளர்கள் எண்ணிகை (சதவீத கணக்கில்) ஆகிய விபரங்கள் படிவத்தில் கேட்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய, நகர, கிளை வாரியாக சிறுபான்மை மற்றும் ஜாதி ரீதியாக உள்ள ஓட்டுகள் குறித்து துல்லியமான விவரங்களை வீடு வீடாக சென்று தி.மு.க., நிர்வாகிகள் சேகரித்து வருகின்றனர். வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலிடத்துக்கு கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும் என, நிர்வாகிகளுக்கு தி.மு.க., மேலிடம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
சட்ட சபைத் தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்குமா? அல்லது பாதகமாக இருக்குமா? என்பது குறித்து உளவுத்துறை போலீசார் ரகசிய சர்வே எடுத்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக வாக்காளர் பற்றிய புள்ளி விவரங்களை அவர்கள் சேகரிக்கத் துவங்கியுள்ளனர். தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க.,- வி.சி., ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க.,- ம.தி.மு.க., இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும் வைத்து, தே.மு.தி.க., மற்றும் பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளை தனி அணியாகவும் வைத்து, கடந்த எம்.பி., தேர்தலில் சட்டசபைத் தொகுதிவாரியாக அவர்கள் பெற்ற ஓட்டுகள், ஓட்டு சதவீதம் ஆகியவற்றையும், சட்டசபைத் தொகுதியின் மொத்த ஓட்டுகள் (மறுவரையறுக்கப்பட்ட தொகுதி வாரியாக) ஆகியவற்றையும் உளவுத்துறை போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.
"ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் ஜாதிரீதியாக எவ்வளவு வாக்காளர் உள்ளனர்?' என்பதையும், அவர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பார்களா, தொகுதியில் ஆளுங்கட்சிக்கு சாதக, பாதக சூழ்நிலை என்ன என்ற புள்ளி விவரங்களையும் உளவுத்துறை போலீசார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர். இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதிவாரியாக அறிவிக்கப்பட்ட அரசு திட்டங்களில் எவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை? என்றும், அங்குள்ள தேவைப்படும் அவசர அடிப்படை தேவைகள் என்ன என்பது குறித்தும் விவரங்கள் உளவுத்துறை போலீஸ் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
THANKS FOR DINAMALAR
தமிழகத்தில் அடுத்தாண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 1991 சட்டசபை தேர்தல் முதல், ஜாதி ரீதியான அமைப்புகள் அரசியல் கட்சியாக உருப்பெற்று தேர்தலில் போட்டியிடத் துவங்கியுள்ளன. வரும் சட்டசபை தேர்தலை குறிவைத்து பல ஜாதி அமைப்புகள், அரசியல் கட்சியாக அவதாரம் எடுக்கத் துவங்கியுள்ளன. 1991க்கு பிறகு தமிழகத்தில் தொடர்ந்து தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பில் இருந்தாலும், சட்டசபை தேர்தலில் தொடர் வெற்றி பெற முடியவில்லை. தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் மாறி மாறித்தான் வெற்றி பெற்றுள்ளன. 2006 சட்டசபை தேர்தலில் மெஜாரிட்டிக்கும் குறைந்த இடங்களை பெற்ற தி.மு.க., முதன் முதன்முறையாக காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. வரும் சட்டசபை தேர்தலில் முழு பலத்துடன் மீண்டும் ஆட்சியை பிடிக்க தி.மு.க., மேலிடம் காய் நகர்த்தி வருகிறது.
முதல் கட்டமாக மாநிலத்தில் சீரமைக்கப்பட்டுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் அடங்கியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் படி, ஜாதி, சிறுபான்மை ரீதியாக உள்ள ஓட்டுகள் பற்றி கணக்கெடுப்பு நடத்த தி.மு.க., நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, தி.மு.க., மேலிடத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள பிரத்யேக விண்ணப்ப படிவங்கள் மாவட்ட நிர்வாகிகளுக்கு சென்னையில் இருந்து வந்துள்ளன. எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., தொகுதி விவரம், ஓட்டுச்சாவடி எண், பாகம் எண், மொத்த வாக்காளர்கள், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள், ஜாதி ரீதியாக உள்ள வாக்காளர்கள் எண்ணிகை (சதவீத கணக்கில்) ஆகிய விபரங்கள் படிவத்தில் கேட்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய, நகர, கிளை வாரியாக சிறுபான்மை மற்றும் ஜாதி ரீதியாக உள்ள ஓட்டுகள் குறித்து துல்லியமான விவரங்களை வீடு வீடாக சென்று தி.மு.க., நிர்வாகிகள் சேகரித்து வருகின்றனர். வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலிடத்துக்கு கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும் என, நிர்வாகிகளுக்கு தி.மு.க., மேலிடம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
சட்ட சபைத் தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்குமா? அல்லது பாதகமாக இருக்குமா? என்பது குறித்து உளவுத்துறை போலீசார் ரகசிய சர்வே எடுத்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக வாக்காளர் பற்றிய புள்ளி விவரங்களை அவர்கள் சேகரிக்கத் துவங்கியுள்ளனர். தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க.,- வி.சி., ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க.,- ம.தி.மு.க., இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும் வைத்து, தே.மு.தி.க., மற்றும் பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளை தனி அணியாகவும் வைத்து, கடந்த எம்.பி., தேர்தலில் சட்டசபைத் தொகுதிவாரியாக அவர்கள் பெற்ற ஓட்டுகள், ஓட்டு சதவீதம் ஆகியவற்றையும், சட்டசபைத் தொகுதியின் மொத்த ஓட்டுகள் (மறுவரையறுக்கப்பட்ட தொகுதி வாரியாக) ஆகியவற்றையும் உளவுத்துறை போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.
"ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் ஜாதிரீதியாக எவ்வளவு வாக்காளர் உள்ளனர்?' என்பதையும், அவர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பார்களா, தொகுதியில் ஆளுங்கட்சிக்கு சாதக, பாதக சூழ்நிலை என்ன என்ற புள்ளி விவரங்களையும் உளவுத்துறை போலீசார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர். இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதிவாரியாக அறிவிக்கப்பட்ட அரசு திட்டங்களில் எவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை? என்றும், அங்குள்ள தேவைப்படும் அவசர அடிப்படை தேவைகள் என்ன என்பது குறித்தும் விவரங்கள் உளவுத்துறை போலீஸ் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
THANKS FOR DINAMALAR
Subscribe to:
Posts (Atom)