சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சட்டசபை யில் கவர்னர் உரையின்போது பெரும் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்ட 9 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வரும் சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் 9 பேரும் கலந்து கொள்ள முடியாது என சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனை கண்டித்து எதிர்கட்சியினர் சபாநாயகரை கேலி செய்யும் விதமாக நாற்காலியில் அமர்ந்து கேலி செய்தனர்.
கவர்னர் உரையில் கூச்சல் - குழப்பம் : 7ம்தேதி நடந்த சட்டசபையில் கவர்னர் பர்னாலா கவர்னர் உரை துவங்கியதும் , விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கண்டனம் தெரிவித்து எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கூச்சல் , குழப்பம் நிலவியதால் இடையூறு செய்யும் எம்.எல்.ஏ.,க்களை சபையில் இருந்து வெளியேற்ற அவைக்காவலர்களுக்கு சபாநாயகர்உத்தரவிட்டடார்.
குண்டு கட்டாக வெளியேற்றும் போது அ.தி.மு.க.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் காவலர்களை அடிக்க பாய்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க., ம.தி.மு.க., மற்றும் இடதுசாரி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
அவை முன்னவர் தீர்மானம் : இன்று (திங்கட்கிழமை) அவையில் கவர்னர் மீதான விவாதம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் கவர்னர் உரையின்போது அவைக்காவலர்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சரும், அனை முன்னவருமான அன்பழகன் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட சபாநாயகர் ஆவடையப்பன் அ.தி.மு.க., வை சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார் உள்பட 9 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., ம.தி.மு.க., மற்றும் இடதுசாரி எம்.எல்.ஏ.,க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
எம்.எல்.ஏ.,க்கள் 9பேர் யார் ? : சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் பெயர் விவரம் வருமாறு: பொள்ளாச்சி ஜெயராமன், பாண்டுரங்கன், டி.ஜெயக்குமார், வேலுச்சாமி, திருத்தணி ஹரி, ரவிச்சந்திரன், எஸ்.எஸ்., கிருஷ்ணமூர்த்தி், செந்தில் பாலாஜி, சீனி சண்முகம் ஆகியோர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவவடிக்கையில் பங்கேற்க முடியாது.
தர்ணா போராட்டம் : சஸ்பெண்ட் ரத்து செய்ய வேண்டும் என்றும், இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார். தொடர்ந்து வெளியேறிய எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சபைக்கு செல்லும் வழியில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
சபாநாயகரை கிண்டல் செய்யும் டிராமா: தர்ணாவிற்கு பின்னர் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம் சபாநாயகர் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை கேலி செய்யும் விதமாக எம்.எல்.ஏ.,க்கள் நடித்துக்காட்டினர். சேரில் ஜெயக்குமார் ( சபாநாயகர் போல் ) அமர்ந்து கொள்ள, எம்.எல்.ஏ.,க்கள் முறையிட பின்னர் பதில் கூற என நடித்து அனைவரும் கைத்தட்டி சிரித்து ரசித்துக்கொண்டனர். மேலும் முதல்வர் கருணாநிதி பதில் சொல்வது போலவும் நடித்துக்காட்டினர்.
No comments:
Post a Comment