Monday, January 10, 2011

ஆ.ராசா மீது புகார்: சுப்பிரமணியசாமி ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம்; டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி

புதுடெல்லி, ஜன. 7-
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சுப்பிர மணியசாமி கடந்த மாதம் 15-ந் தேதி டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக நான் கொடுக்கும் புகாரை வழக்காக ஏற்றுக் கொண்டு ஆ.ராசாவுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் ஊழல் தடுப்பு சட்ட விதிப்படி என்னை அரசு வக்கீலுக்கு நிகரான வக்கீலாக நியமித்து வாதாட அனுமதிக்க வேண்டும்.
 
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரிக்கும் சி.பி.ஐ. அமலாக்கப் பிரிவு போன்ற விசாரணை அமைப்புகள் என்னை விசாரணைக்கு உதவியாக அமர்த்திக் கொள்ள உத்தர விட வேண்டும் என்று கேட்டு இருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. நீதிபதி பிரதீப் சத்தா இதை விசாரித்தார்.
 
அப்போது சுப்பிரமணிய சாமியும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அவரிடம் நீதிபதி பிரதீப் சத்தா “இந்த வழக்கில் நீங்கள் புகார்காரராகவும், அரசு வக்கீலாகவும் ஒரே நேரத்தில் இரட்டை வேடம் போட நினைக்கிறீர்கள். இதற்கு அனுமதிக்க முடியாது என்றார். அதற்கு சுப்பிரமணியசாமி நான் இரட்டை வேடம் போட அனுமதி கேட்கவில்லை.
 
இந்த வழக்கை பொறுத்தவரை புகார்காரர் என்ற முறையில் முதலில் சில சாட்சியங்களை சொல்ல விரும்புகிறேன். அதன் பின்னர் குற்றம் செய்தவரிடம் நடக்கும் கோர்ட்டு விசாரணைக்கு உதவி செய்ய விரும்புகிறேன். அதற்காகத் தான் அரசு வக்கீலுக்கு நிகரான வக்கீலாக என்னையும் நியமிக்கும்படி கேட்கிறேன்” என்றார்.
 
அதற்கு நீதிபதி பிரதீப் சத்தா, “உங்கள் வழக்கு தொடர்பாக புகார் ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். இது சம்பந்தமான விசாரணை தொடர்ந்து நடக்கும். நீங்கள் உங்கள் சாட்சியங்களை கோர்ட்டில் அளிக் கலாம். அது பதிவு செய்து கொள்ளப்படும். அதை தொடர்ந்து விசாரணை நடக்கும் மற்ற விஷயங்கள் அடுத்த கட்டங்களாக எடுத்து கொள்ளப்படும்” என்றார். 

No comments:

Post a Comment